அனலி வானொலி தமிழுக்கும் தமிழ் மக்களின் மேம்பாட்டிற்கும் தன்னார்வம் கொண்ட படைப்பாளரால் கலை இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்கே எனும் நோக்கத்தில் கலை இலக்கிய ஊடகங்களின் வழியாக இயங்கிவருகின்றது.
தமிழுக்கும் தமிழ் மக்களின் மேம்பாட்டிற்காகவும் தன்னார்வம் கொண்டு இயங்கும் படைப்பாளரின் தன்முனைப்பில் வான்தமிழின் தேன்சுவயாய் அனலி வானொலி ஒலிபரப்பாகிவருகின்றது.
கதைமரம், நேர்காணல்கள், அறிவுக் களஞ்சியம், பாதுகாப்பாய் பயணிப்போம், ஆன்றோரும் சான்றோரும், கிராமியப் பாடல்கள், நூல் அறிமுகம், வானொலி நாடகங்கள் என பல நிகழ்ச்சிகள் கலந்த கதம்பம் இது.
தினமும் மாலை 08 மணிமுதல் ஒலிபரப்பாகும் இந்நிகழ்வை கேட்கத் தவறாதீர்கள். நீங்களும் இந்நிகழ்ச்சியில் எம்மோடு பங்கெடுக்கலாம். .
உங்கள் படைப்புகளை எங்களோடு பகிர்ந்து கொள்வதோடு, உங்கள் சொந்தக்குரலிலேயே எமது வானொலியும் நாங்கள் ஒலிபரப்பும் வாய்ப்பையும் நீங்கள் பெறலாம்.
தொடர்பு கொள்க analitamilradio.gmail.com, +91 94434 83074
தி த சண்முகவடிவேலு, பொறியாளர், திருச்சி- படைப்பாளர்
கதைமரம்
அ. கெப்சிபா, ஆசிரியர், கோவை – கதை சொல்லி
அறிவுக்களஞ்சியம்
பாலமுருகன், நூலகர், கோவை – கதை சொல்லி
நேயர் கருத்துகள்
“அருமையாக உள்ளது மென் மேலும் வளர வாழ்த்தி வணங்கி வரவேற்கிறோம்…”
குமரவேல்தொழில்நுட்ப வல்லுனர், கோவை
“அருமையான பணி, மேலும் சிறக்க வாழ்த்துகள்”
பரிதிவேந்தன் வேலுதிரைக்கலைஞர், சென்னை
“அனலி சிறுவர் மேம்பாட்டிற்காக இயங்கி பாராட்டத்தக்கது”
பார்த்திபன்சமூப்பணியாளர், G18, கோவை
“தமிழ்போல் சிறக்க வாழ்த்துகள்..!”
இரவிகுமார்கோவை
“மிகச்சிறந்த முன்னெடுப்பு”
விவேக் ஆனந்த்சென்னை
“பல்சுவையாக ஒலிபரப்பாகின்ற கதம்பம் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கின்றது”
சிலுவை வஸ்தியான்சமூகப் பணியாளர், நாகர்கோவில்
“அருமையான முயற்சி, தேன் மழைச் சாரல் போன்று இனிமையான தெம்மாங்கு பாடல்களால் தமிழுக்கு பெருமை சேர்த்து ,நம் செவியின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற திவ்ய உணர்வுகளை தூண்டும் நல்லதொரு வானொலி நிகழ்ச்சி.”
மகேந்திரன்மேலாளர், கோவை
“தமிழுக்கு தொடர்ந்து பணிபுரிந்துவருகின்ற அனலியை வாழ்த்துகிறேன்.”
மரம் யோகநாதன்சுற்றுசூழல் ஆர்வலர், கோவை
எமது நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியைச் சார்ந்த இவர் ஒரு தனியார் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
தன்னுடைய ஓய்வு நேரங்களின் அனலியின் சமூக மேம்பாட்டுபணிகளில் ஈடுபடுவதோடு, அனலி வானொலியின் கதை சொல்லியாகவும், தன்னார்வ நிகழ்ச்சித் தொகுப்பாளராக சேவையாற்றி வருகிறார்.
01
அ. கெப்சிபா
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சார்ந்த பாலமுருகன் ஒரு தனியார் கல்லூரியின் நூலகராகப் பணிபுரிந்து வருகின்றார். அவர் தம் ஓய்வு நேரங்களின் அனலி வானொலியின் தன்னார்வ நிகழ்ச்சித் தொகுப்பாளராக சேவையாற்றுகிறார்.
அத்தோடு அனலியின் கதைச்சொல்லியாகவும், அறிவுக்களஞ்சியம், பட்டறிவுச் சோலை போன்ற நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றார்.
02
பால முருகன்
ஒலித்தொகுப்பும் நிகழ்ச்சித் தலைமையும்
குரல் கலைஞராகவும் ஒலித்தொகுப்பு நுட்பவாளராகவும் இருக்கின்ற இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் செல்வபுரத்தைச் சார்ந்தவர் ஆவார்.
ஆங்கிலத் துறைபேராசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர் தன்னார்வச் சேவையாக அனலி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தலைமைப் பொறுப்பை ஏற்று இயங்கிவருகின்றார்.
மேலும், அனலி வானொலியின் இளம் தொகுப்பாளர்களுக்கான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
03
யாகேல் ஜேசுராஜ்
தமிழ் மணம் நுகர, தமிழ் மனதைத் தக்க வைக்க கேட்கத் தவறாதீர்கள்அனலி வானொலி “இது வான்தமிழின் தேன்சுவை”